Friday, 13 December 2013

உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்..
உடுத்த உடையிருந்தால்..
தலை மேல் கூரையிருந்தால்..
உறக்கம் கொள்ள இடமிருந்தால்..
உலகின் 75 சதவிகித மக்களைவிட நீங்கள் மேலானவரே!

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்..
உங்கள் பர்ஸில் சிறிது சில்லறை இருந்தால்..
உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!

நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால்..
எந்தவித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்..
தினம் தினம் செத்துப் பிழைக்கும், கோடானு கோடி மக்களைவிட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே!

மேற்கூறியவைகளைத் தங்களால் படித்துப் பார்க்க முடிந்தால்..
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களைவிடவும் நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே!!!

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?

No comments:

Post a Comment