Friday, 13 December 2013

சந்தித்துவிட்டு பிரிகிற நேரம்
திரும்பி பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறது என்றேன்...

அன்று முதல் திரும்பி
பார்ப்பதில்லையென
சத்தியம் செய்துவிட்டு பிரிந்தோம்...

மறையும் கடைசி நொடியில்
நீ பார்க்கமாட்டாயென நானும்
நான் பார்க்க மாட்டேனென் நீயும்

ஒன்றாய் திரும்பி பார்க்க‌
செய்த சத்தியம் எங்கே போனதென‌
சத்தியமாய் தெரியவில்லை.....

No comments:

Post a Comment