Friday, 13 December 2013

அன்பு


அன்பு

ஏழைக‌ள்

அட‌மானம்

வைத்துவிட்டார்க‌ள்...

ப‌ண‌க்கார‌ர்க‌ள்

வ‌ட்டிக்கு
விட்டு விட்டார்க‌ள்...
கூட்டாஞ்சோறாக்கி
கூடித்தின்னோம்
ஒருகாலம்...

ஆகாத காலம் வந்து
ஆளுக்கொரு தேசமானோம் ...
பத்து மாதம்
சுமக்கவில்லை...
பத்தியம் எதுவும்
இருந்ததில்லை...
பாசத்தை
வெளிப்படையாய்
காட்டியதில்லை...
நிலாச்சோறு
ஊட்டியதில்லை...

பண்டிகை நாட்களில்
எங்களுக்கான செலவு
ஆயிரங்களில் இருக்க..
உனக்கான செலவு
சில நூறுகளில்
முடிந்துவிடும்...

ஒருக்களித்து
நான் உறங்குகையில்
"எங்க அம்மா மாதிரியே இருக்கா"
பலமுறை நீ கூறியது
இன்னும் ஒலிக்கிறது
என் காதுகளில்...

அம்மா நம்ம‌ அப்பா சூப்பர்ல..
அப்பா ஏன் தான் இப்படியோ..
எப்டிமா அப்பாவ சமாளிக்கற?..
இப்பாடியான எல்லாக் கேள்விகளுக்கும்
அம்மா சிரிப்பு ஒன்றையே பதிலாய்
தருகையில் தெரிகிறது
அவளிடத்திலான உன் புரிதல்...

50ஐ தொடும் வயதிலும்
அழைத்தகுரல் ஓயும்முன்
அருகில் ஓடி நிற்கையில் தெரிகிற‌து
உன் அம்மை அப்ப‌னிட‌ம் நீ
வைத்திருக்கும் பாச‌மும் ப‌ணிவும்...

நீ கலங்கி நின்று
நான் கண்டதில்லை..
ஏனோ அழுகின்ற அம்மாவின்
முகம் போல அவ்வளவு
எளிதில் கானக்கிடைப்பதில்லை
அழுகின்ற அப்பாவின் முகம்...

நேற்று
என் அப்பாவுக்கு
எல்லாம் தெரியும்
எனும் வயது
இன்று
என் அப்பாவுக்கும்
எல்லாம் தெரியும்
எனும் வயது
உன் பாசம் மாறவில்லை...

நாளை
என் அப்பாவுக்கு
என்ன தெரியும்
எனும் வயதும் வரும்
அப்போதும்
உன் பாசம் மாறப்போவதில்லை
என்றும் எனக்கு தெரியும்...

love you appa...
சந்தித்துவிட்டு பிரிகிற நேரம்
திரும்பி பார்க்கும் போதெல்லாம்
அழுகை வருகிறது என்றேன்...

அன்று முதல் திரும்பி
பார்ப்பதில்லையென
சத்தியம் செய்துவிட்டு பிரிந்தோம்...

மறையும் கடைசி நொடியில்
நீ பார்க்கமாட்டாயென நானும்
நான் பார்க்க மாட்டேனென் நீயும்

ஒன்றாய் திரும்பி பார்க்க‌
செய்த சத்தியம் எங்கே போனதென‌
சத்தியமாய் தெரியவில்லை.....

படித்ததில் பிடித்தது:

எதுவும் கலைந்து கிடைக்கவில்லை
சிரிப்பு அழுகை சத்தங்களோ
அம்மாவின் அதட்டும் குரல்களோ
அழுக்கான பந்துகளோ
கழற்றி எறியப்பட்ட உடைகளோ
எதுவுமின்றி தனித்திருக்கிறது வீடு
ஆம்
திருவிழா முடிந்த ஊரும்
குழந்தைகளின் விடுமுறை கடந்த வீடும்
இப்படித்தான்..
உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்..
உடுத்த உடையிருந்தால்..
தலை மேல் கூரையிருந்தால்..
உறக்கம் கொள்ள இடமிருந்தால்..
உலகின் 75 சதவிகித மக்களைவிட நீங்கள் மேலானவரே!

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்..
உங்கள் பர்ஸில் சிறிது சில்லறை இருந்தால்..
உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!

நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால்..
எந்தவித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்..
தினம் தினம் செத்துப் பிழைக்கும், கோடானு கோடி மக்களைவிட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே!

மேற்கூறியவைகளைத் தங்களால் படித்துப் பார்க்க முடிந்தால்..
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களைவிடவும் நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே!!!

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?
வாழ்க்கை என்பது
என்றோ நடக்கப்போவது அல்ல..

இக்கணம் அரங்கேறி கொண்டிருப்பது..!!!

வாழ்கிறோமா அல்லது
உயிரோடு மட்டும் இருக்கிறோமா???

சுயபரிசீலனை செய்து கொள்வோம்..
நேற்றிரவு நடந்தது:

(என் பாட்டியின் தங்கை போன் பன்னுனாங்க, கட் பண்ணிட்டு நான் பண்ணேன். அதுக்கு முன்னாடி மற்ற பேரப்பிள்ளைகளுக்கும் போன் பன்னிருக்காங்க,,)

நான்: ஹலோ.... அம்மா....

பாட்டி: தங்கம்......

நான்: சொல்லும்மா, காலைல போன் பண்ணப்போ ஏன் எடுக்கல?

பாட்டி: வெளிய இருந்திருப்பேன்டா . அதான்டா..

நான்: சரிம்மா,,, நீ நல்லாருக்க ல?

‌பாட்டி: நல்லாருக்கேன்டா........

நான்: சரிம்மா,,, நீ உடம்ப பாத்துக்கோ, நேரத்துக்கு சாப்புடு..

இரும்மா அம்மாட்ட கொடுக்கறேன்......

பாட்டி: தங்கம்......

நான்: சொல்லும்மா....

பாட்டி: சந்தோசமா இருக்குப்பா

நான்: எதுக்குமா?

பாட்டி: உனக்கு முன்னாடி வள்ளி, ராஜேஸ், சசி, தமிழ், ராஜி எல்லார்கிட்டயும் பேசுனேன்டா,

ஆனா, யாருமே நீ நல்லாருக்கியா? சாப்டியா? னு கேக்கலடா..
நீ கேட்ட ல! சந்தோசமா இருக்குப்பா,,,,..

( எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல..,)....

நான்: அம்மா...

பாட்டி: சொல்ல தோனுச்சுடா... சரிப்பா, அம்மாட்ட குடு...

நான்: ம்ம்ம் …

# நாம் கண்டுகொள்ளாமல் விட்ட உறவுகளும் அதனுள் புதைந்த உணர்வுகளும் காத்துகொண்டிருக்கிறது நம் அன்பிற்க்காக......
தொலைந்து போன
இரவுகள்
எத்தனையோ !!!
அதில் தொலையாமல்
இருப்பது,

உன்
நினைவுகளும்,
என் கற்பனைகளும்
தான்..... !!!
ந‌ம‌க்கு பிடித்த‌வற்றை
ப‌ரிமாறி ம‌கிழும்போது
அது அவ‌ளுக்கும் பிடிக்கும்
என்ப‌தை ம‌றக்கிறாள்...

அவ‌ளுக்கென‌ வைக்காம‌ல்
தீர்ந்துவிடும் போது
அவ‌ளுக்கு வ‌யிறு இருப்ப‌தையே
ம‌றந்துவிடுகிறாள்...

க‌ட‌வுள் அம்மா வ‌டிவில் வ‌ந்தானா?
இல்லை த‌ன‌க்கு ப‌திலாக
அனுப்பி வைத்தானா?
அதெல்லாம் என‌க்கு தெரியாது
என்னை பொறுத்த‌ம‌ட்டில்
அம்மா க‌ட‌வுளுக்கு
நிக‌ரான‌வ‌ள் அல்ல‌,
க‌ட‌வுளுக்கும் மேலான‌வ‌ள்...

தங்க‌த்திலும் தூசு இருக்க‌லாம்
ஆனால்
தாயின் பாச‌த்தில் என்றும்
மாசு இருப்ப‌தில்லை.......
மோசமான பெண்களை ஆராயாமல்
அவர்களிடம் ஏமாறுவதும்,
பாசமான
பெண்களை புரியாமல்
சந்தேகப்படுவதும்
ஆண்களின்
தலை எழுத்து..!!
எத்தனை முறையானாலும்
மன்னிக்கத் தயாராய் இருப்பவரிடம்
ஒரு முறையேனும் விசுவாசமாய்
இருந்து விடுங்கள்...!!!!!
உறங்க நினைத்தும்
உறங்காத விழிகள்
சொல்ல நினைத்தும்
திறக்காத உதடுகள்
கேட்க நினைத்தும்
கேட்காத காதுகள்
மறக்க நினைத்தும்
மறக்காத இதயம் என
புலன்கள் யாவும்
போலியாய் மறுகின்றன
உன் நினைவுகளால்..!